மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது . யாரும் எதிர்பார்க்காத நிலையில் மொரப்பூர் ஒன்றியத்தில் எலவடை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொரப்பூர் ஒன்றியம் முழுவதும் பஞ்சாயத்து தலைவர் திருமதி.உமா உலகநாதன் அவர்கள் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்.மேலும் மொரப்பூர் சந்தைமேடு , நடுபட்டியை தொடர்ந்து மூன்றாவது நாளாக மொரப்பூர் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும், மற்றும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கினார் .